Friday, August 3, 2012

உண்மை எழுதினேன்...(PART 1)

Karthick Leaving to Coimbatore

பள்ளி மற்றும்   கல்லூரி  வாழ்வில்  நடந்த சில  சம்பவங்களே  இந்த  கதையின்  மூல  காரணம்  ஆகும்.


டிஸ்கி: இந்த   கதையில்  வரும்  சம்பவங்கள்  மற்றும்  கதாபாத்திரங்கள்  அனைத்தும்  கற்பனையே! ஆனால் இதே  போன்ற  சம்பவங்கள்  உங்கள்  வாழ்க்கையில்  நடந்திருந்தாலோ அல்லது   இந்த கேரக்டர்கள்   ஆங்காங்கே   உலாவிக்கொண்டு   இருந்தாலோ நிர்வாகம்   பொறுப்பல்ல     


இன்று 

சரியான மழை செமஸ்டர் எக்ஸாம் முடிச்சுட்டு  college canteenசுரேஷ் காக  wait பண்ணிட்டு இருந்தேன்.

அவன் வந்தான்
 டேய் எங்கடா மூட்ட முடிச்சோட கிளம்பிட்ட?

Coimbatore போறேன் டா. உன் கார்ல என்ன கொஞ்சம் ஏர்போர்ட் ட்ராப் பண்ண முடியூமா மச்சி ? 

வாட்  Coimbatoreகு  flightல போறியா? அப்டி என்ன முக்கியமான மேட்டர்.

என்  Diploma friend Mohan Reception...
Actuallல இது ஒரு திருட்டு கல்யாணம் தான். பொண்ணு வீட்டுக்கு தெரியாது இன்னும். 
போட்டோ எடுக்க வேற என்ன கேமராவோட வர சொன்னான்.

டேய் முன்னெல்லாம் திருட்டு கல்யாணம் எல்லாம் பயந்து பயந்து பண்ணுவாங்க. நீங்க என்னடானா  reception!.... அதுக்கு நீ  போட்டோ எடுக்க  flightல போற. எல்லாம் கொஞ்சம் ஓவரா  தான் இருக்கு. 


மச்சி அவன் எனக்கு ரொம்ப க்ளோஸ் friendறா.


சரி சரி கார்ல ஏறு.


SRM University இருந்து கார்ஏர்போர்ட் செல்கிறது

நேத்து கூட உன்கிட்ட பேசினேன்   Coimbatore போறத பத்தி ஒன்னும் சொல்லல.
சரி சரி   flight எத்தனை மணிக்கு 

4:10க்கு  மச்சி.

டேய் நீ என்ன லூசாட டைம் இஸ் நவ்   1:30 டா.

மச்சி I know that . என்னால இப்போ வீட்டுக்கு போயிட்டு வர முடியாது . More over I don't trust Chennai City traffic. 

போர் அடிக்குமே டா. 3 மணி நேரம் என்ன பண்ண போற?

சுஜாதா புக்  ஒன்னு இருக்கு. அத படிக்க ஆரம்பிச்சா அப்படியே டைம் போறது தெரியாது மச்சி....

புக் சைஸ் சின்னதா தான் இருக்கு. எப்படியும் அத அரை மணி நேரத்துல படிச்சி முடிச்சிடுவ. அப்புறம் என்ன பண்ணுவ? நீ எதோ கதை எழுத போறனு சொன்னியே என்ன ஆச்சு?

தலைவர் சுஜாதா ஸ்டைல் humor. கௌதம் மேனன் ஸ்டைல்  Narration ல எழுத ட்ரை பண்ணுறேன். ஒன்னும் முடியல மச்சி.

Flightக்கு டைம் இருக்கு. வா அப்டியே ஒரு Barக்கு  போய் இத பத்தி பேசுனா என்ன?

வேணாம் மச்சி கண்டிப்பா நான்  flightஅ  மிஸ் பண்ணிடுவேன் ஆள விடு.

கார் ஏர்போர்ட்  நுழையூம் போது மழை விட்டிருந்தது.


Chennai Airport
சரி மச்சான் ஏர்போர்ட் வந்துடுச்சு. வில் கெட் பேக் டு யூ

மச்சி உன் Wife  எங்க?

அவ already  ஈரோடு போய் அவுங்க  அப்பா வீட்டுல இருக்கா. அவ  Receptionகு அப்டியே வந்துடுவா
.
அட பாவி அப்ப, வீட்டுல நேத்து யாரும் இல்லையா?  சொல்லிருந்த ஒரு FULLலோட வந்துருபேன்ல

மச்சி போதும் உன் ஹெல்ப். தேங்க்ஸ். பை பை.

டேக் கேர் டா . Bye Bye...

காரில் இருந்து இறங்கி ஏர்போர்ட் உள்ளே சென்றேன்.
எனது போர்டிங் பாஸ் வாங்க  Queue வில் நின்றேன்.

HelpDesk: Sir which Seat  do you prefer?

வின்டோ சீட் என்று கேட்டு வாங்கிய உடன் என் மனதில் பல எண்ணங்கள் ஓட தொடங்கியது. பல முறை இந்த சீட்டுக்கு பஸ்சில் அடித்து கொள்வோம்.

ஆனால் அவள் ஒருத்திக்கு மட்டும் தான் இந்த சீட்டை விட்டுகொடுத்து இருக்கேன். ஆனால் இப்போ அவ எங்க இருக்கான்னு கூட எனக்கு தெரியாது

இதே  coimbatoreகு பல முறைஅவளை தேடிபோயிருபேன். 

போர்டிங் பாஸ் வாங்கிய உடன் சுஜாதாவின் புக்க படிக்க ஆரம்பிச்சேன்.

சுரேஷ் சொன்னது போல் அந்த புக்க 30 நிமிடத்தில் படிச்சு முடிச்சிட்டேன்.

ஒரே  பிகரா இருந்துச்சு. 
எனக்குஅவ ஞபாகம் வந்துச்சு. எவ்ளோ நேரம் அவர்களை சைட் அடிச்சாலும் அவளை போல் ஸ்டைல யாரும் இல்ல ..

இன்னும் ரெண்டரை மணி நேரம் இருக்கு. என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்
பசங்க யாருக்காது போன் பண்ணி மொக்க போடலாம். 

Facebook
"At  Airport. Leaving Coimbatore for Mohan's Reception,waiting  for my  flight" னு ஒரு Status update போடலாம்.

ஏன்டா வெட்டி சீன் போடுறனு கமெண்ட் வரும். அதனால அதை நான் பண்ணல.

நானும் நண்பன் மோகனும், காலேஜ்ல் ஒன்னா அடிச்ச லூட்டிகளை  யோசிக்கிட்டு இருந்தேன். மனம் ரொம்ப பாரம் ஆச்சு. மீண்டும் அவ ஞபாகம் குத்துப்பாட்டு போல கும்மா குத்து ஆடுது
அப்டியே சில வருடம் பின்னால போனேன். 
அவகிட்ட பேசின வார்த்தைகள் அப்டியே நினைவூக்கு வருது . 
என்னமோ நேத்து மீட் பண்ணின  மாதிரி இருக்கு. 
என் வாழ்கைல மறக்க முடியாத தருணங்கள். 


இட்ஸ ஜஸ்ட் ஹப்பென்ட்?

.....அவ பேரு ஜெஸ்ஸி.. அவ்ளோ அழகு. கிளாசி..படிச்சவ..சாரி தான் கட்டுவா..அவகிட்ட ஒரு ஸ்டைல் இருக்கு.. செக்ஸி டூ....

தொடரும் ...


8 comments:

  1. நானும் நண்பன் மோகனும், காலேஜ்ல் ஒன்னா அடிச்ச லூட்டிகளை யோசிக்கிட்டு இருந்தேன். மனம் ரொம்ப பாரம் ஆச்சு. மீண்டும் அவ ஞபாகம் குத்துப்பாட்டு போல கும்மா குத்து ஆடுது
    அப்டியே சில வருடம் பின்னால போனேன்.
    அவகிட்ட பேசின வார்த்தைகள் அப்டியே நினைவூக்கு வருது .
    என்னமோ நேத்து மீட் பண்ணின மாதிரி இருக்கு.
    என் வாழ்கைல மறக்க முடியாத தருணங்கள். மறக்க முடியாத வரிகள்

    ReplyDelete
  2. Machan really superb da ..... enna solrathu nu theriala da.... very happy .... thnks a lot machi .....

    ReplyDelete
    Replies
    1. dei eruma avan unna pathi solla varala da ok va? romba feel panraramam..... poda vengayam.......

      Delete
  3. தலைவா....நீங்க நல்லா வருவிங்க ...ஆனா ஒன்னும் மட்டும் புரியல !!!!! ( just for clarification not to hurt so pls dnt mistake me ) நீங்க முதல்ல இப்படி அரம்பிக்கிரிங்க "பள்ளி மற்றும் கல்லூரி வாழ்வில் நடந்த சில சம்பவங்களே இந்த கதையின் மூல காரணம் ஆகும்." அப்புறம் "இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே! ஆனால் இதே போன்ற சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்திருந்தாலோ அல்லது இந்த கேரக்டர்கள் ஆங்காங்கே உலாவிக்கொண்டு இருந்தாலோ நிர்வாகம் பொறுப்பல்ல" ஏன் இந்த தடுமாற்றம் ?
    எது எப்படியோ....கொஞ்சம் சுவாரசியமா எழுத முயற்சியதற்கு பாராட்டுகள்...சபாஷ் நண்பா....மேலும் தொடரட்டும் ... தங்களின்இளமை கால நினைவலைகள் :)

    ReplyDelete
    Replies
    1. முரண் பாடுக்கு மனிக்கவும். அடுத்த Partல கண்டிப்பா என் Disclaimer ah Change பண்ணுறேன்.

      Delete
  4. unmaiya solrenu solitu bayapulla poora poiya solitu irukia nee

    ReplyDelete

Your Comments Please